போலி கடன் அட்டைகளை அச்சிடும் விற்பனையில் ஈடுபட்ட சீன நாட்டு பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய கொள்ளுபிடி ஹோட்ல் ஒன்றில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு அச்சகம் மடிக்கணனி உட்பட மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.