பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இராணுவத் தளபதி வழங்கிய அறிவிப்பின்படி, இராணுவத் தளபதியும் கூட முன்னாள் அமைச்சர் ரசாட் பதியுதீனுக்கு பயப்பட்டுள்ளமை தெரியவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எமது பயத்தைப் போக்குவதற்கு காணப்படும் இராணுவத் தளபதியும் கூட, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு பயன்படுவதையே தெரிவுக் குழு முன்னிலையில் அவர் வழங்கிய வாக்கு மூலம் எடுத்துக் காட்டுகின்றது.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், தனக்கு முன்னர் அழுத்தம் கொடுத்ததாக கூறிய இராணுவத் தளபதி, தெரிவுக் குழுவில் சென்று தனக்கு எதுவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லையெனக் கூறியுள்ளார்.
இதன்படி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு நாட்டின் இராணுவத் தளபதியே பயப்படுவதாக இருந்தால், அப்பாவி பொலிஸ் அதிகாரி பற்றி என்னதான் கூறவேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசாரணைகள் முடியும் வரையில் ரிசாட் பதியுதீனுக்கோ, அவரது கட்சியினருக்கோ எந்தவித அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொள்ள இடமளிக்கக் கூடாது எனவும் கம்மம்பில மேலும் கூறினார்.