போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது இலங்கை அரசாங்கம் சுயமாக நடைமுறைப்படுத்த முடியுமான ஒரு தீர்மானம் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.
எக்காரணம் கொண்டும் இந்த தீர்மானத்தில் மூக்கை நுழைப்பதற்கு வெளிநாடுகளுக்கு அதிகாரம் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.