கோட்டாபய ராஜபக்ஸ தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ரணில் விக்ரமசிங்கவிடமுள்ள பிரதமர் பதவி பறிக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தும் வரையில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது என்பதனால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்து புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை என்பன நியமனம் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் 120 எம்.பி.க்களின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஸவுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார காரியாலயத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறிள்ளார்.