ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதே மிகவும் பொருத்தமானது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி நாரஹேன்பிட ஶ்ரீ அஹயாராம விகாரையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டு நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.
*****************************************************************************************
19 ஆவது அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய நிலைமைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படுமென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் 19 ஆவது அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய நிலைமைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்து நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட வரையறைகளின்படி செயற்பட்டுச் செல்ல எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோன்று, நாட்டின் நிருவாக முறைமை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் என்பவற்றையும் முழுமையாக சீர்திருத்தம் செய்வதற்கு தேவையான சகல தகவல்களையும் எதிர்வரும் நாட்களில் மக்களிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.