சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறுகோரி சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று (21) பிற்பகல் எழுத்துமூல ஆவணமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கபீர் ஹாசீம், ரஞ்சித் மத்தும பண்டார உட்பட ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள சஜித் ஆதரவு அணி எம்.பிக்கள் 45 பேர் ஆதரவு தெரிவிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை ஜனாதிபதிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் சஜித்துக்கு வழங்குமாறு அக்கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திவந்த நிலையிலேயே இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.