இடைக்கால அரசின் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்குச் சேவை செய்யத் தயாராக உள்ளேன்.
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசுக்கான அமைச்சரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 16 அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர்.
இந்தநிலையில், அவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.