வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்கள் கடந்த வியாழக்கிழமை தனது கடமையினை அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர்களுக்கு மத்தியில் பொறுப் பேற்றுக்கொண்டார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி அவர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்தனையடுத்து தளபதி அவர்கள் யுத்தத்தினால் உயிர் நீத்த படை வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி அவர்களுக்கு 20 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இராணுவ அணிவகுப்பு மரியாதையை அடுத்து வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 19 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்கள் செத் பிரித் மத வழிப்பாடுகளுக்கு மத்தியில் தனது கடமைகளைபொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் படைத் தலைமையகத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்னாள் மா மரக் கன்றினையும் நட்டிவைத்த அவர், ஏனைய படை வீர்ர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
மேலும் இந்த வைபவத்தில் அனைத்து படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், படைத் தலைமையங்களின் கட்டளை தளபதிகள், படைப் பிரிவுகளின் கீழ் உள்ள கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படை வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வட மத்திய முன்னரங்க பாதுகாப்பு தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க கருணாதிலக , வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேட் பொது நிருவாக அதிகாரி மற்றும் பிரிகேடியர் ஹரேந்திர ரனசிங்க ஆகியோர் புதிய தளபதியை வரவேற்றனர்.