அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பில் தேடுவதற்காக நியமிக்கப்பட்ட விஷேட குழு தற்போதைய அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது குறித்து தாம் விசேட கவனம் செலுத்தவிருப்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபகஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் - மாவத்தகமயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இந்நாட்டில் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு இதுவே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 70 வீதமானவர்கள் கிராம புறங்களிலேயே வாழ்கின்றனர்.
ஆகவே, கிராமங்களின் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் விசேட அவதானம் செலுத்தப்படும்.
அத்துடன், தமது ஆட்சியில் கல்விக்கு அதிகளவான முதலீடு செய்யப்பட்டு, கல்வி முறையினை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரத்தில் கல்வி கற்கும் அனைவருக்கும், பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பொய்களை கூறி மக்களை திசைத்திருப்பி வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு சிலர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் அரசியலில் மாத்திரமே மாற்றங்கள் ஏற்பட்டன அபிவிருத்தியில் ஏற்படவில்லை.
இந்த நிலையில், அஞ்சல்மூல வாக்குகளில் 80 வீதமான அரச ஊழியர்கள் மொட்டு சின்னத்திற்கு வாக்களித்துள்ளார்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.