2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச மகத்தான வெற்றியை தனதாக்கி கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளதோடு தாம் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் மூலம் தனது வாழ்த்துக்களையும் கோட்டாபயவிற்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்தும் தாம் விலகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.